ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மீது தனிப்பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது சுந்தர்.சியுடன் 'ஒன் டூ ஒன்' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அனுராக் காஷ்யப். கடந்த சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் அனுராக் காஷ்யப் கேரளா மீடியாக்களிடம் பேசும்போது, “நான் மலையாள படம் ஒன்று நடிக்க இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் இயக்குனரிடம் நான் என்ன கதாபாத்திரம் செய்கிறேன் என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.