தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற வெற்றி கூட்டணியின் அடுத்த படமாக உருவாகியுள்ளது 'நேர்'. நீதிமன்றத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் இன்று டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபக் உன்னி என்கிற கதாசிரியர் நேர் படத்தின் கதை என்னுடையது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுபற்றி அவர் மனுவில் கூறும்போது, “இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இணை எழுத்தாளர் சாந்தி மாயா தேவியும் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்று வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்தபோது 49 பக்கங்கள் அடங்கிய இந்த கதையின் காப்பியை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டனர். பின்னர் படத்திலிருந்து என்னை நீக்கியும் விட்டனர். சமீபத்தில் 'நேர்' படத்தின் ட்ரெய்லர் காட்சிகளை பார்த்த போதுதான் இது என்னுடைய கதை என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் நேர் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதே சமயம் படத்தின் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.