தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு திரை உலகில் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எந்த அளவிற்கு பெண் ரசிகைகள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு இளைஞர்களும் மாணவர்களும் கூட விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் கூட ஏப்ரல் அல்லது மே மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு கோரிக்கை வைத்துள்ளதும் அதற்கு விஜய் தேவரகொண்டா பதில் அளித்ததும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அவருடைய ரசிகர்களான சில மாணவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டனர். அதில் விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவிற்கு கீழே தனது கமெண்ட்டை பதிவிட்டால் நாங்கள் தேர்வுக்கு தயாராக துவங்குவோம் என்று கூறியிருந்தனர். ஆச்சரியமாக இந்த வீடியோ விஜய் தேவரகொண்டாவின் கவனத்திற்கு வந்ததும், அந்த பதிவின் கீழே, “90% மதிப்பெண்கள் வாங்குங்கள்.. உங்களை நேரிலேயே சந்திக்கிறேன்” என வாக்குறுதி கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டுமல்ல, பலரும் அவரது இந்த ஊக்கமான வார்த்தைகளுக்கு தங்களது பாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.