தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் அதன் வித்தியாசமான மேக்கிங் மற்றும் புதுவிதமான கதை சொல்லல் முயற்சிக்காக மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் டர்போ மற்றும் பஷூக்கா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வருகின்றன. இதில் புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் டர்போ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக மம்முட்டி நடித்து வரும் பஷூக்கா படத்தில் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது நடைபெற்று வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிமிஷ் ரவி என்பவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்ற சென்று விட்டார்.
இந்தநிலையில் இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் என்கிற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜ். இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கியவர் தான். ஆனால் தற்போது இயக்குனராக மாறிவிட்ட நிலையிலும் மம்முட்டியின் மீது கொண்ட அபிமானத்தால் மீண்டும் கேமராவை தனது தோளில் தூக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.