பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தற்போது அவர் பா.ஜ.க சார்பில் திருச்சூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் அன்னை மேரியின் சிலைக்கு தங்க கிரீடம் வழங்குவதாக சுரேஷ் கோபி அறிவித்து தனது மனைவி ராதிகா மற்றும் மகள் பாக்யாவுடன் சென்று தங்க கிரீடத்தை மாதா சிலைக்கு அணிவித்தார்.
தற்போது அது தங்க கிரீடம் இல்லை என்றும் செம்பு பூசப்பட்ட கிரீடம் என்றும் சர்ச்சை கிளம்பி உள்ளது. பொதுவாக தங்க கிரீடம், தங்க பதக்கம் என்பதெல்லாம் 100 சதவிகித தங்கத்தில் செய்யப்படுவதில்லை. தங்க முலாம் பூசப்பட்டே தயாரிப்பார்கள். இதனால் அந்த கிரீடம் தங்க முலாம் பூசப்பட்டதா? அல்லது தங்க வர்ணம் பூசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விஷயத்தை பூதாகரமாக்கி வருகிறது.