பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சவுமியா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியா ஷெட்டி தனது தோழி வீட்டில் ஒரு கிலோ வரை தங்க நகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தொண்டபர்த்தியில் வசிக்கும் பிரசாத் பாபு என்பவர் வீட்டில் ஒரு கிலோ 750 கிராம் தங்கம் திருட்டு போனது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நடிகை சவுமியா ஷெட்டி நகைகளை திருடியது தெரிய வந்தது.
பிரசாத் பாபுவின் மகள் மவுனிகாவுடன் நட்பை ஏற்படுத்தி அவரது வீட்டுக்கு சவுமியா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பீரோ சாவியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவாவில் தங்கி இருந்த சவுமியா ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 74 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.