கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

மறைந்த பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் மூத்த மகன் இந்திரஜித் மற்றும் இளைய மகன் பிரித்விராஜ். இருவருமே பிரபல நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்கிற பெருமையும் பெற்றார். அதை தொடர்ந்து ப்ரோ டாடி, படத்தை இயக்கியவர் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பிரித்திவிராஜின் அண்ணன் இந்திரஜித் சுகுமாரனும் டைரக்ஷனில் இறங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தமிழில் என் மன வானில், சர்வம் மற்றும் இன்னும் வெளியாகாத நரகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லூசிபர் படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி தான் இந்திரஜித் படத்திற்கும் கதை எழுதி வருகிறாராம். மோகன்லாலை ஹீரோவாக வைத்து பிரித்விராஜ் தனது முதல் படத்தை இயக்கினார் என்றால் இந்திரஜித் தனது தம்பி பிரித்விராஜை கதாநாயகனாக வைத்தே தனது முதல் படத்தை இயக்க இருக்கிறாராம் .