வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் 'விலாயத் புத்தா' என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்று கூறி சோசியல் மீடியாவில் தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்ததை தொடர்ந்து படத்தின் 15 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டன. ஆனாலும் படம் குறித்து வெவ்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரப்பப்பட்டு வந்தன. இதனால் வசூல் ரீதியாகவும் படம் பதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிரித்விராஜ் இயக்கத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படம் வெளியான போதும் சர்ச்சைகளில் சிக்கியது. அதில் இயக்குனரான பிரித்விராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முன்னாள் நடிகையும் பிரித்விராஜின் தாயாரூமான மல்லிகா சுகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “எனது மகன் மீது தொடர்ந்து சோசியல் மீடியாவில் சைபர் கிரைம் தாக்குதல் நடைபெறுகிறது. அவரை சினிமாவிலிருந்து விலக்க வேண்டும் என சிலர் திட்டமிட்டு இந்த வேலைகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து எந்த சங்கங்களும் என் மகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வரவில்லை. குறிப்பாக நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகனின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கூட அவருக்கு ஆதரவாக இருக்கும் எனது மகனுக்கு எதிராக செயல்படுபவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். மொத்த திரையுலகமும் சேர்ந்து எனது மகனுக்காக குரல் கொடுத்து பாதுகாக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.




