'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! | பொங்கல் வெளியீட்டில் அனல் பறக்குமா : ஜனநாயகன், பராசக்தி விழாவில் பேசுவார்களா? | தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! |

தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களில் அவரது அதிரடியான வசனங்கள், ஆக் ஷன் காட்சிகள் ஒரு பக்கம் ரசிகர்களை ஈர்க்கிறது என்றால் நிஜத்திலும் அவரது நடவடிக்கைகள் பலரையும் மிரள வைப்பதாகவே இருக்கும். பாலகிருஷ்ணா தனது ரசிகர்களை பார்க்கும்போது எப்போதுமே ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை உச்சரிப்பார். அதேபோல ரசிகர்களும் எப்போதும் ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை ஒரு ஸ்லோகம் போல சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவரது அகாண்டா 2 திரைப்படம் நேற்று வெளியாகவில்லை.
இப்படம் தொடர்பாக ஒரு பேட்டியில் அவரிடம் இந்த ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை நீங்கள் எப்போது முதன் முதலாக கேட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பாலாகிருஷ்ணா, “எப்படி மகாபாரதத்தில் அபிமன்யு கருவில் இருக்கும்போதே பத்ம வியூகம் பற்றி அறிந்து கொண்டானோ அதேபோல என் தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்த வார்த்தைகள் எனக்கும் கேட்டது” என்று கூறியுள்ளார்.
படத்தில் தனது கைகளால் ரயிலையே தடுத்து நிறுத்தும் பாலையா நிச்சயமாக தனது கருவில் இருக்கும்போதே இந்த வார்த்தைகளை கேட்டிருக்க வாய்ப்புண்டு என ரசிகர்கள் பலரும் தங்கள் பங்கிற்கு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.