'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! | பொங்கல் வெளியீட்டில் அனல் பறக்குமா : ஜனநாயகன், பராசக்தி விழாவில் பேசுவார்களா? | தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகியுள்ளது. '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் நேற்று டிசம்பர் 5ம் தேதியன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பைனான்ஸ் கிளியர் செய்யாததால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக பாலகிருஷ்ணா அவரது சம்பள தொகையில் இருந்து ரூ. 7 கோடியும், போயப்பட்டி ஸ்ரீனு அவரது சம்பளத்தில் இருந்து ரூ.4 கோடியும் விட்டுக் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பிரச்னையை சுமுகமாக தீர்த்து அடுத்த கட்டமாக இப்படத்தை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அல்லது 25ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர விநியோகஸ்தர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.