கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” |

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தெலுங்கு மற்றும ஹிந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். சமீப வருடங்களாக படம் இயக்குவதில் ஒரு தேக்க நிலை இருந்தாலும் எப்போதுமே பரபரப்பு செய்திகளில் இடம் பிடித்து வருபவர். இந்த நிலையில் முதன்முறையாக நடிகராக அதுவும் ஒரு படத்தில் ஹீரோவாகவே நடித்து வருகிறார் ராம்கோபால் வர்மா. இந்த படத்திற்கு ஷோமேன் என்கிற டைட்டிலும் மேட் மான்ஸ்டர் என்கிற டேக்லைனும் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் சுமன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் நூதன் என்பவர் இயக்குகிறார். ராம்கோபால் வர்மா இயக்கிய பல படங்களை தயாரித்த ராம சத்திய நாராயணா இதை தயாரிக்கிறார் .
ராம்கோபால் வர்மா எப்படி இந்த படத்திற்குள் ஹீரோவாக வந்தார் என்பது குறித்து தயாரிப்பாளர் ராம சக்திய நாராயண கூறும்போது, “நான் புதிய படம் எடுப்பதற்காக சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் தேதி கேட்டு பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய 'கடவுளான' ராம்கோபால் வர்மாவையே ஹீரோவாக்க முடிவு செய்தேன். ராம்கோபால் வர்மாவுக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வொர்த் ஆனவர். ஆனால் இப்போது வரை ஒரு பைசா சம்பளம் கூட வாங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் முடியட்டும் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டார்” என்று கூறியுள்ளார்.