இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களை முடித்த கையோடு நடிகர் பிரபாஸ் கொஞ்ச நாள் ஓய்வெடுக்க விரும்பி சினிமாவை விட்டு ஒதுங்கி வெளிநாடுகளில் தங்கியிருந்தார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டு நடித்து வந்தார் பிரபாஸ்.
இத்தாலியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். சயின்ஸ் பிக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.