பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

மலையாள திரையுலகை பொறுத்தவரை ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூட மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படி ஏதேனும் கட்டாய தேவை இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பார்கள் (சிபிஐ பாகங்கள் போல). அதனால் மலையாளத்தில் இரண்டாம் பாக படங்கள் வெளியாவது ரொம்பவே குறைவு. இந்த நிலையில் தான் 'ஆடு' என்கிற படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015ல் 'ஆடு' படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சீரியல் கொலையை மையப்படுத்தி வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'அஞ்சாம் பாதிரா' என்கிற படத்தை இயக்கியவர். அதைத் தொடர்ந்து 2017ல் ஆடு படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டானது.
தற்போது ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதே கூட்டணியில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மூன்று பாகங்களின் தயாரிப்பாளர், மலையாள நடிகர் விஜய் பாபு தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை பலாத்கார வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.