ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக வெளியாகும் மலையாள படங்கள் கேரளாவையும் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசூலையும் ஈட்டுகின்றன. ஒரு பக்கம் இப்படி மலையாள படங்களை பற்றி பிரமிப்புடன் பேசினாலும் இன்னொரு பக்கம் இப்படி சமீப காலமாக வெற்றி பெற்ற படங்களில் கதாநாயகிகள் என்கிற கதாபாத்திரமே இல்லை என்பதும் குறிப்பாக சாதாரண பெண் கதாபாத்திரங்கள் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் மலையாள திரையுலகில் விவாத பொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக மஞ்சும்மேல் பாய்ஸ், மம்முட்டியின் பிரம்மயுகம், கண்ணூர் ஸ்குவாட், பஹத் பாசிலின் ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இடம்பெறவில்லை. இந்த நிலையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கி வரும் 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன், மலையாள சினிமாவில் பெண்கள் எங்கே போனார்கள் என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.
குறிப்பாக ஆவேசம் படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகளில் பெண்களை அதிகம் காட்டுவதற்கு வாய்ப்பு இருந்தும் கூட ஒரு மாணவனின் தாயார் என்கிற ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தை மட்டும் காட்டி பெண்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்கள் இது பற்றி கூறும்போது கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே படத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று கூறுகின்றனர்.