நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சமீபகாலமாக வெளியாகும் மலையாள படங்கள் கேரளாவையும் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசூலையும் ஈட்டுகின்றன. ஒரு பக்கம் இப்படி மலையாள படங்களை பற்றி பிரமிப்புடன் பேசினாலும் இன்னொரு பக்கம் இப்படி சமீப காலமாக வெற்றி பெற்ற படங்களில் கதாநாயகிகள் என்கிற கதாபாத்திரமே இல்லை என்பதும் குறிப்பாக சாதாரண பெண் கதாபாத்திரங்கள் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் மலையாள திரையுலகில் விவாத பொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக மஞ்சும்மேல் பாய்ஸ், மம்முட்டியின் பிரம்மயுகம், கண்ணூர் ஸ்குவாட், பஹத் பாசிலின் ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இடம்பெறவில்லை. இந்த நிலையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கி வரும் 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன், மலையாள சினிமாவில் பெண்கள் எங்கே போனார்கள் என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.
குறிப்பாக ஆவேசம் படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகளில் பெண்களை அதிகம் காட்டுவதற்கு வாய்ப்பு இருந்தும் கூட ஒரு மாணவனின் தாயார் என்கிற ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தை மட்டும் காட்டி பெண்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்கள் இது பற்றி கூறும்போது கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே படத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று கூறுகின்றனர்.