பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.
கடந்த இரண்டு முறை தலைவராக இருந்த மோகன்லால் பணிச்சுமை காரணமாக இந்த முறை அவர் அவர், மீண்டும் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் வெளியாயின. இதனால் நடிகர்கள், குக்கு பரமேஸ்வரன், அனூப் சந்திரன், ஜெயன் செர்தாலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் மோகன்லால், ஒருமனதாகத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அந்தப் பதவிக்குப் போட்டியிட இருந்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.