இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையாக நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசியலில் நுழைந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியலில் நுழைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இவரது திரையுலக பயணத்தில் சிறிய தேக்கம் விழுந்தது. அந்த சமயத்தில் இவரது மூத்த மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. கதாநாயகனாக இல்லாமல், ஹீரோயின் நண்பனாக, முக்கிய துணை கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் கோபியின் இரண்டாவது மகன் மாதவ் சுரேஷ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாகும் கும்மாட்டி களி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. தமிழில் பிரியமுடன், யூத் என இரண்டு ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்த இவர் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சுரேஷ் கோபியின் மகனை அறிமுகப்படுத்த மலையாளத்திலேயே பல இயக்குனர்கள் தயாராக இருக்கும் நிலையில் தமிழிலிருந்து ஒரு இயக்குனரை அழைத்து வருவதற்கு காரணம் என்ன என சுரேஷ்கோபியிடம் கேட்கப்பட்டபோது, “நல்ல கதை.. ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர்.. நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இது போதாதா என் மகனின் அறிமுகத்திற்கு ?” என்று நம்பிக்கையாக வின்சென்ட் செல்வாவிடம் மகனை ஒப்படைத்து விட்டாராம். அதுமட்டுமல்ல ஒருநாள் கூட மகனின் நடிப்பை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கும் வந்தது இல்லையாம். வரும் ஜூலை மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் வின்சென்ட் செல்வாவை கூறியுள்ளார்.