ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஒரு அடார் லவ். புருவ அழகி என அப்போது பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமானது இந்த படத்தில் தான். ஓமர் லுலு என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறி சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ஓமர் லுலு மீது போலீசில் புகார் அளித்தார். அதே சமயம் அந்தப்பெண்ணும் தானும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில் உறவில் இருந்ததாக கூறிய ஓமர் லுலு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதே சமயம் புகார் அளித்த அந்தப்பெண், புகார் குறித்து முக்கியமான சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இயக்குனர் ஓமர் லுலுவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் அந்த ஆதாரங்களை சேதப்படுத்தி விடக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்துள்ளது.