படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ், தெலுங்கில் வெளியான தசரா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் அடிபடும் சாக்கோ சில வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று கைது செய்யப்பட்டு பின் விடுதலை ஆனவர். சமீப வருடங்களாக பொறுப்புணர்வுடன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வருடம் அவருக்கும் அவரது காதலியான மாடல் அழகி தனுஜாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தற்போது தான் சிங்கிளாக கூறியிருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இவர்களது பிரேக்கப் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவரது காதலி தனுஜா சோசியல் மீடியா லைவ் வீடியோவில் இது குறித்து உருக்கமாக பேசி உள்ளார். தங்களது பிரேக்கப் குறித்து அவர் கூறும்போது, “மற்றவர்களை விட சாக்கோவை நான் ரொம்பவே நேசித்தேன். ஆனால் யாரையும் அதிகம் நம்பக் கூடாது என்பதை இந்த நாட்களில் நான் புரிந்து கொண்டேன். அவருக்காக என்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தேன். ஆனால் என்னுடைய குடும்ப போட்டோவை அவர் உடைத்தெறிந்தார். அவர் நல்ல மனிதர் தான். இப்போதும் அவரைப் பற்றி நான் தவறாக கூறவில்லை. அதேசமயம் அவரை மட்டுமல்ல நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களை கூட நம்புவதற்கு மனம் தயங்குகிறது. என்னுடன் நெருக்கமான நட்பில் இருந்த பலர் கூட உங்கள் இரண்டு பேருக்கும் நீண்ட நாளைக்கு செட்டாகாது என இரண்டு வருடத்திற்கு முன்பே எங்களுக்கு தெரியும் என இப்போது கூறுவது இன்னும் என்னை காயப்படுத்துகிறது” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.