'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை |

தமிழ் சினிமாவை போலவே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களுக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்குவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பில் நடித்தாலும் பெரும்பாலான ஹீரோக்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்துவதற்காகவே இப்படி பட தயாரிப்பில் ஈடுபடுவது தான் அதிகம். அந்த வகையில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தற்போது படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். முதன்முறையாக அவர் தயாரிக்கும் படத்திற்கு மரண மாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவபிரசாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இது ஒரு மாஸ் படம் அல்ல என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் டொவினோ தாமஸ். இவர் நடித்த மின்னல் மின்னல் முரளி என்கிற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குனர் பஷில் ஜோசப் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரித்விராஜுடன் இவர் இணைந்து நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பஷில் ஜோசப் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள நுனக்குழி என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் நஸ்ரியாவுடன் இவர் இணைந்து நடித்து வரும் சூட்சும தர்ஷினி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது மரண மாஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அனேகமாக இன்னும் சில வருடங்களுக்கு டைரக்ஷன் பக்கம் பஷில் ஜோசப் திரும்பிப் பார்க்க மாட்டார் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.