பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
மலையாள திரை உலகில் 35 வருடங்களாக பிசியான குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் சித்திக். சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல பெண்கள் தைரியமாக தாங்கள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதை போலீசில் புகார் அளிக்க முன் வந்தனர். அப்படி ஒரு பெண், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஒரு ஹோட்டலில் தன்னிடம் நடிகர் சித்திக் அத்துமீறி நடந்து கொண்டார் என திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,
இதனைத் தொடர்ந்து சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகும் சூழல் உருவானபோது கேரள உயர்நீதிமன்றமும் ஜாமீன் தராமல் கை விரித்த போது சில நாட்கள் தலைமறைவாக இருந்து உச்ச நீதிமன்றத்தை நாடி கைது செய்யப்படுவதற்கான இடைக்கால தடை பெற்றார் சித்திக். சமீபத்தில் மீண்டும் அந்த தடைக்கான நீட்டிப்புக் காலமும் அவருக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவருக்கு வலியுறுத்தியது.
ஏற்கனவே அவர் சரியாக விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்றும் தவறான தகவல்களை கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும் கடுப்பில் இருந்த விசாரணை அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு வந்த அவரை கைது செய்தனர். அதே சமயம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக சித்திக் உடனடியாக மீண்டும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பலரும் எதற்காக இந்த அவசர கைது மற்றும் ஜாமீன் நாடகம் என காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.