ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீப காலங்களாக தனது சர்ச்சையான பேச்சுக்களால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவரது படங்கள் தான் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் ஆகும் போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அனல் பறக்கும், ரத்தம் தெறிக்கும் அதிக அளவு வன்முறை காட்சிகளுடன் தனது படங்களை கொடுத்து வந்தவர் ராம்கோபால் வர்மா. இப்போது மலையாளத்தில் வெளியாகி உள்ள உன்னி முகுந்தன் நடித்துள்ள ‛மார்கோ' திரைப்படம் தனது படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக வன்முறை விருந்தாக உருவாகி இருப்பதை பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
இது குறித்து தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, “மார்கோ படத்தை விட வேறு எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான பாராட்டு கிடைத்திருக்குமா என்றால் ஒருபோதும் இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தை பார்ப்பதற்கு நான் சாவதற்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னி முகுந்தன் என்னை நிச்சயம் கொல்ல மாட்டார் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஏழு சண்டை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஏழுமே அதிக அளவில் வன்முறை கொண்ட சண்டைக் காட்சிகளாக தான் படமாக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த படம் ராம்கோபால் வர்மாவின் பாராட்டுகளை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.