சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான ஜோஷி கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஜு ஜார்ஜ் நடித்த 'அந்தோணி' என்ற படத்தை இயக்கினார். இப்போது அவர் உன்னி முகுந்தனுடன் பான் இந்தியா படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை உன்னி முகுந்தன் பிலிம்ஸ், ஜன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தேசிய விருது வென்ற 'மேப்படியான்' மற்றும் 100 கோடி வசூலித்த ஆக்ஷன் திரைப்படமான 'மார்கோ' படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் பிலிம்ஸ் தற்போது இயக்குநர் ஜோஷியுடன் இணைகிறது.
'பொரிஞ்சு மரியம் ஜோஷ்', 'கிங் ஆப் கோதா' போன்ற படங்களில் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என்.சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.
இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.