'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

கடந்த சில நாட்களாகவே விலை உயர்ந்த கார்களை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அந்த பரபரப்பு தற்போது கொஞ்சம் அடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே மம்முட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்தார். அதற்கு முன்னதாக அவர் மோகன்லால், பஹத் பாசில், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் சிலகட்ட படப்பிடிப்பு கேரளா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது.
மம்முட்டியின் உடல்நல குறைவு காரணமாக சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மம்முட்டி இல்லாமல் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மம்மூட்டி உடல்நலம் தேறி ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த ஷெட்யூல் முடிவடைந்ததும் தற்போது லண்டனில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. லண்டனில் தான் மிக முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம். இதற்காக நடிகர் மம்முட்டி சென்னை ஏர்போர்ட்டில் இருந்து துபாய் வழியாக லண்டன் கிளம்பி சென்றார். அவரது மகனான நடிகர் துல்கர் சல்மான் அவரை விமான நிலையத்திற்கு வந்து வழி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.