லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாள திரையுலகில் பிரபல பாடலாசிரியாக வலம் வந்த அனில் பனச்சூரன் என்பவர் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 55.. மாவேலிக்கராவில் உள்ள செட்டிக்குளக்கரா கோவிலுக்கு சென்றபோது, அவர் திடீரென நினைவிழந்து மயங்கிய நிலையில், மாவேலிக்கரா மற்றும் கருநாகப்பள்ளியில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டார்.. அதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அனில் பணச்சூரன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு கொரோனா பாசிடிவ் என்று மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும், அவரது குடும்பத்தினர், இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸில் புகார் அளித்துள்ளனராம்.
கடந்த 2005 முதல் மலையாள திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த அனில் பனச்சூரன், அடிப்படையில் கம்யூனிச சிந்தனை கொண்டவர்.. அதனால் மலையாளத்தில் கம்யூனிச கதைக்களத்தில் உருவான படங்களில் அதிகம் பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான, 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இவர் எழுதிய 'ஜிமிக்கி கம்மல்' பாடல் உலக அளவில் புகழ்பெற்று, இவரை இன்னும் நன்கு பிரபலமாக்கியது.. கடந்த வருடம் விஜய்சேதுபதி மலையாளத்தில் அறிமுகமான மார்க்கோனி மத்தாய் படத்திலும் இவர் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.