தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று துவங்குகிறது... இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விபரம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நிகழ்ச்சியின்போதுதான் தெரியவரும்.
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது..
அதேபோல கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சில சச்சரவு நிகழ்வுகளும், அவற்றை கையாள்வதில் மோகன்லால் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றும் விமர்சித்து,, அவருக்கு பதிலாக நடிகர் சுரேஷ்கோபி இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என சிலர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சேனல் நிர்வாகம் இந்தமுறையும் மோகன்லாலுக்கே அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.