ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதேபோன்று ஆண்டு தோறும் பெங்களூருவிலும் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். அதன்படி 13வது பெங்களூரு சர்வதே திரைப்பட விழா கடந்த மாதமே நடந்திருக்க வேண்டியது. கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கி 31ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சுமார் 40 நாடுகளை சேர்ந்த 90 படங்கள் வரை திரையிடப்படுகிறது. இதுதவிர இந்த ஆண்டு சத்யஜித் ரேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் சிறப்பு பிரிவில் திரையிடப்படுகிறது. கர்நாடக சலனசித்ர அகாடமி சார்பில் திரைப்படங்கள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. 11 மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் இந்த பட விழாவுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது.
இதற்கான லோகோ அறிமுக விழா நடந்தது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சர்வதேச பட விழாவுக்கான லோகோவை வெளியிட்டார். இதில் நடிகர், நடிகைகள், கர்நாடகா பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.