தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதேபோன்று ஆண்டு தோறும் பெங்களூருவிலும் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். அதன்படி 13வது பெங்களூரு சர்வதே திரைப்பட விழா கடந்த மாதமே நடந்திருக்க வேண்டியது. கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கி 31ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சுமார் 40 நாடுகளை சேர்ந்த 90 படங்கள் வரை திரையிடப்படுகிறது. இதுதவிர இந்த ஆண்டு சத்யஜித் ரேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் சிறப்பு பிரிவில் திரையிடப்படுகிறது. கர்நாடக சலனசித்ர அகாடமி சார்பில் திரைப்படங்கள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. 11 மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் இந்த பட விழாவுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது.
இதற்கான லோகோ அறிமுக விழா நடந்தது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சர்வதேச பட விழாவுக்கான லோகோவை வெளியிட்டார். இதில் நடிகர், நடிகைகள், கர்நாடகா பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.