தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. ஆனால் தனது சக நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போல இளமையான கதாபாத்திரங்களில் நடிக்கமால், வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் கடந்த வருடம் வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' என்கிற படத்தில், ஒரு இளம்பெண்ணுக்கு தாயான ஷோபனாவை காதலிக்கும் வயதான பிரம்மச்சாரி வேடத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் காவல் மற்றும் பாப்பன் ஆகிய படங்களில் அவர் ஹீரோவாக நடித்தாலும், அவை ஆக்சன் படங்களாக உருவாக்கி வந்தாலும் கபாலி ரஜினி போல நரைத்த தாடி மீசையுடன் சற்றே வயதான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான அந்தப்படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.