பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் நரேஷின் பதவிக்காலம் முடிவடைவதால் விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா ஆகிய மூன்று பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதனால் தற்போது தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் பிரகாஷ்ராஜை கன்னடர் என்றொரு விசயத்தை முன்வைத்து எதிரணியினர் பிரச்சாரம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான பாண்ட்லா பிரகாஷ் என்பவர் குரல் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரகாஷ்ராஜ் தெலுங்கர் அல்ல, கன்னடர் தான். ஆனால், ஐதராபாத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை
தத்தெடுத்துள்ளார். அந்த மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வளர்ச்சிப் பணிகளை ஆற்றி வருகிறார். அந்த அளவுக்கு தெலுங்கு மக்களுக்காக அவர் சேவை செய்கிறார். அப்படிப்பட்ட அவரை வெளி மாநிலத்தவர் என்று பிரித்துப்பேசுவது தவறு என்று பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதோடு, ராஜமவுலி, பிரபாஸ் போன்றவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசிய அளவில் பிரபலமாகி விட்டனர். அவர்களையெல்லாம் மற்ற மொழியினர் புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? கலைஞர்களை மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.