படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சீரியல்களில் நடித்து வந்தவர் தான் பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத். அதன்பின் பஞ்சாபி படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக அதை பார்த்து தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது. அந்தப்படம் ஹிட்டாகவே, தெலுங்கு ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார் பாயல் ராஜ்புத். இந்த நிலையில் தற்போது அவர் மீது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநிலம் எடாப்பள்ளி நகரத்திலுள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பாயல் ராஜ்புத். அப்போது அவர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அவரைக் காண்பதற்காக அங்கே மிகப் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் முண்டியடித்ததால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்ததன் பேரில் தற்போது கடை நிர்வாகத்தின் மீதும் பாயல் ராஜ்புத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.