தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரையுலகின் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் நடிகர் சுரேஷ்கோபி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஏற்றுமானூர் பகுதியை சேர்ந்த அஸ்வதி அசோக் என்கிற ஏழைப் பெண் ஒருவருக்கு திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாகவும் அளித்துள்ளார் சுரேஷ்கோபி.
இருபது வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த அஸ்வதிக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சமயத்தில் தான் கொரோனா தாக்கம் காரணமாக திருமணத்தை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வரும் செப்-9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் சிலர் மூலமாக சுரேஷ்கோபிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து, ஏற்றுமானூர் மகாதேவன் கோவிலில் முன்பாக வைத்து, திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. அவரது இந்த செயல் சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.