ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மலையாள திரையுலகின் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் நடிகர் சுரேஷ்கோபி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஏற்றுமானூர் பகுதியை சேர்ந்த அஸ்வதி அசோக் என்கிற ஏழைப் பெண் ஒருவருக்கு திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாகவும் அளித்துள்ளார் சுரேஷ்கோபி.
இருபது வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த அஸ்வதிக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சமயத்தில் தான் கொரோனா தாக்கம் காரணமாக திருமணத்தை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வரும் செப்-9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் சிலர் மூலமாக சுரேஷ்கோபிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து, ஏற்றுமானூர் மகாதேவன் கோவிலில் முன்பாக வைத்து, திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. அவரது இந்த செயல் சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.