பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் மற்றும் சமீப வருடங்களாக தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். தற்போது அவர் நடித்துள்ள விக்ராந்த் ரோனா என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சுதீப். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சுதீப், பிறந்தநாள் சிறப்பு தரிசனமாக, சாமுண்டீஸ்வரி கோவில் சென்று வழிபட்டுள்ளார் அவருடன் அவரது குடும்பத்தாரும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் சென்றிருந்தனர். சுதீப்பின் எதிர்பாராத திடீர் வருகையால் கோவிலில் ரசிகர்கள் கூடிவிட அவர்களை கலைத்து, சுதீப்பை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்குள் போலீசார் ரொம்பவே திணறித்தான் போனார்கள்.