பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாகஅறிவிக்கப்பட்டது. கடைசிநாள் படப்பிடிப்பு முடிவடைந்து அவர்கள் ஸ்டுடியோவிற்குள் இருந்து வெளியே வரும் வீடியோவைகூட வெளியிட்டிருந்தனர். அதோடு பிக்அப் ஷாட்களை தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
அதனால் அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக படமாக்கப்பட்ட சில காட்சிகளில் தனக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்கப்போகிறாராம் ராஜமவுலி. அதற்காக இன்னும் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தபடப்பிடிப்பு நடைபெறுகிறது.