தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களை அடுத்து தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா கடந்த வாரம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்போது படத்தின் தலைப்பு அறிவிப்பின் வீடியோ ஒளிபரப்பு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அப்போது பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. என் பின்னால் அனுமன் ஆசி இருப்பதாக எனது அப்பா விஜயேந்திர பிரசாத் ஒரு முறை கூறினார். இந்த தொழில்நுட்ப சிக்கல் வந்துள்ளதால் எனக்குக் கோபம் வந்துள்ளது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா ?. என் மனைவி அனுமனின் தீவிர பக்தை. அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள். எனக்கு அவர் மீதும் கோபம் வந்தது. என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு உதவுவானா என்று பார்ப்போம்,” என்று பேசினார்.
அவர் பேசியபின் தொழில்நுட்பக் கோளாறு சரியாகி, அந்த வீடியோ சரியான முறையில் ஒளிபரப்பானது. அப்படியென்றால் அனுமன், கடவுள் நம்பிக்கை இல்லாத ராஜமவுலிக்கும் உதவி செய்துள்ளார் என்றுதான் அர்த்தம்.
ராஜமவுலியின் இந்த பேச்சிற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, அவர் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார்கள். இதனிடையே, தீவிர இந்து மத பக்தரான, சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தெலங்கானா எம்எல்ஏ ராஜா சிங், ராஜமவுலிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.