தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

‛ஆர் ஆர் ஆர்' படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛வாரணாசி' என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய படத்தில் நடிக்கிறார்.
இந்த வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் மஞ்சள் நிற புடவை கெட்டப்பில் துப்பாக்கியை வைத்து யாரையோ அவர் குறி வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஆக்சன் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் படங்களில் நடிக்க தான் வாங்குவது போன்று 30 கோடி சம்பளம் பிரியங்கா சோப்ரா வாங்கி இருப்பதாக டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.