பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவான பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி 200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற பெருமையும் அவருக்கு பெற்று தந்தார். அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குவதற்கு தயாராகி வந்த பிரித்விராஜ் அதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற முழு நீள காமெடி படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த போது முழு திருப்தியடைந்த மோகன்லால் பிரித்விராஜை பாராட்டும் விதமாக அவருக்கு ஒரு கூலிங் கிளாஸ் பரிசளித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார். அதன் தற்போதைய மார்க்கெட் விலை ஒன்றரை லட்சம் ரூபாயாம். மோகன்லாலின் இந்த பரிசை பெருமிதத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரித்விராஜ்.