கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'கோடியில் ஒருவன்'.
கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதக் கடைசியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதற்குப் பிறகு வெளிவந்த புதிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், 'கோடியில் ஒருவன்' படத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு தியேட்டர்கள் பக்கம் ரசிகர்கள் வந்தனர்.
அதனால், படம் நல்ல வசூலைப் பெற்று படத்தை வாங்கியவர்களுக்கும் திரையிட்டவர்களுக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது. விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'லாபம்' படம் வசூலைக் கொடுக்கும் என்று நம்பிய தியேட்டர்காரர்களுக்கு விஜய் ஆண்டனி படம் லாபத்தைக் கொடுத்தது எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது.
இப்போதும் 'கோடியில் ஒருவன்' படம் 50 தியேட்டர்களில் 25 நாளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 50 சதவீத இருக்கைகளில் இன்றைக்கும் மக்கள் வரவேற்பு இப்படத்திற்குக் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வெற்றி விஜய் ஆண்டனி நடித்து அடுத்து வெளிவர உள்ள 'தமிழரசன், அக்னிச் சிறகுகள்' ஆகிய படங்களுக்கு புத்துணர்வைக் கொடுத்துள்ளது.