பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டதும் ஐதராபாத்திலேயே கணவருடன் தனி வீட்டில் குடியேறினார். ஆனால், அந்த வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பாகவே நாக சைதன்யா வெளியே போய்விட்டார் என்றார்கள். இருந்தாலும் சமந்தா இன்னும் அந்த வீட்டில்தான் இருந்து வருகிறார். ஐதராபாத்தை விட்டுச் செல்லும் எண்ணமில்லை என்றும் கடந்த வாரம் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஹோட்டல், அப்பா நாகார்ஜுனா வீடு என மாறி மாறி இருந்து வந்த நாக சைதன்யா தற்போது ஒரு புதிய அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றுள்ளாராம். அதோடு, ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் நடிகை தபுவுக்குச் சொந்தமான வீட்டை வாங்கியுள்ளாராம் நாகசைதன்யா. அந்த வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அந்த வேலைகள் முடிந்ததும் அந்த வீட்டிலேயே குடி புகுவார் எனத் தெரிகிறது.
அப்பா வழியில் நாக சைதன்யாவும் சில வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.