ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'டாக்டர்'. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவழைத்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. படம் வெளிவந்து பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
50 சதவீத இருக்கைகளில் இந்த அளவிற்கு வசூல் என்பது மிகவும் ஆச்சரியம் என மிரண்டு கிடக்கிறது தமிழ்த் திரையுலகம். கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய்யின் 'மாஸ்டர்' படம்தான் தியேட்டர்களைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் 'சுல்தான், கர்ணன்' படங்கள் ஓரளவிற்கு வசூலித்தது. இப்படங்கள் நல்ல வசூலைப் பெறுவதற்கு முன்பாக கொரானோ இரண்டாவது அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலைக்குப் பிறகு 'டாக்டர்' படம் வசூல் என்பது 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு அதிக வசூல் என்றும் சொல்கிறார்கள். தீபாவளி வரை வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாத காரணத்தால் 'மாஸ்டர்' வசூலை நெருங்கினாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை என்கிறார்கள்.
'டாக்டர்' பட வெளியீட்டுச் சிக்கலில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து படம் வெளிவர பேருதவி புரிந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுத்துவிடுவார் என்றே தெரிகிறது.