மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.
தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன் 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.
பிரதமருக்கு கோரிக்கை
அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த மயூரி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஏராளமான ஹிந்தி மற்றும் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார்.
மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றி காட்டும்படி கேட்டார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
![]() |