ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னை: ஆஸ்கர் 2022 போட்டிக்கு இந்தியா சார்பில் கூழாங்கல் படம் போட்டியிட உள்ளது.
ஆஸ்கர் எனப்படும், 94வது அகாடமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடக்கிறது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடந்தது. இதில் , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, நாயாட்டு படங்களும், தமிழில், கூழாங்கல், மண்டேலா உள்பட 14 படங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
![]() |
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம், 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில், 14 படங்களையும் பார்வையிட்டனர் இதில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் உருவான, கூழாங்கல் படம் தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கூழாங்கல் தேர்வாகியுள்ளது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
சமீபத்தில், ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், கூழாங்கல் படத்துக்கு டைகர் விருது கிடைத்தது. இந்த வகையில் டைகர் விருதை பெற்ற முதல் படமாக இப்படம் உள்ளது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகிறது.