ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன், சினிமாவில் இயக்குனராக உள்ளார். கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கி உள்ளார். இப்போது பொன்னியின் செல்வன் நாவலை வெப்சீரிஸாக உருவாக்கும் பணியில் இறங்கி உள்ளார். இதனிடையே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக ‛ஹூட்' என்ற செயலியை துவங்கி உள்ளார். இந்த செயலியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் எந்த மொழியிலும் குரலிலேயே பதிவிடலாம், பகிரலாம்.
இந்த செயலியின் துவக்க விழா இன்று(அக்., 25) சென்னையில் நடந்தது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி டில்லியில் உள்ளார். அங்கிருந்தபடியே தனது குரலில் பதிவிட்டு இந்த செயலியை துவக்கி வைத்தார். ரஜினி கூறுகையில், “ஹூட் செயலியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. இனி எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம். அருமையான கண்டுபிடிப்பு. டுவிட்டர், பேஸ்புக் போன்று பிரபலமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.