ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். டில்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விருது வழங்கி கவுரவித்தார்.
‛‛இந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர், சகோதரர் சத்யநாராயணன், நண்பர் ராஜ் பகதூர் மற்றும் திரைத்துரையை சார்ந்த அனைத்து கலைஞர்கள், ரசிகர்களுக்கும், தன்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதை பெற்ற பிறகு டில்லியில் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
விருதுகளுடன் மாமனார் - மருமகன்
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். ஒரேநேரத்தில் ஒரே விழாவில் மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷூம் விருது பெற்றனர். இவர்கள் இருவரும் விருதுகளுடன் போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.