சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு'. டைம் லூப் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்ட படம் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் நவ., 25க்கு படத்தை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில், ‛‛மாநாடு படத்தில் என் கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பிண்ணுது, 10 நாட்களாவது ஓய்வு தேவை. அவ்வளவு வலி. ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவ., 25 தாண்டா தீபாவளி'' என பதிவிட்டுள்ளார்.