இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நயன்தாராவே ஒரு டிவி பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே, ஹிந்தியில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிக்கவிருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
போதைக் பொருள் வழக்கில் ஷாரூக்கான் மகன் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் தன்னுடைய ஹிந்திப் பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். அட்லீ இயக்கி வரும் அந்தப் படம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தள்ளிப் போவதால் ஏற்கெனவே மற்ற படங்களுக்காகக் கொடுத்த தேதிகளுக்கு சிக்கல் வரும் என்பதால் அப்படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறார் என்கிறார்கள்.
இருந்தாலும் இந்த வருடத்தில் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகத்தான் சமீபத்தில் கோவில்களுக்குச் சென்று வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திருமணத் திட்டம் காரணமாகவும் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி நயன்தாராவிடமிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே இது உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும்.