2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அடுத்ததாக திரையுலகில் காதல் திருமணம் செய்யலாம் என் நினைப்பவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக, நடிகை சமந்தா மற்றும் அவரது தனது கணவர் நாகசைதன்யாவின் திருமண முறிவு அமைந்துவிட்டது. ஆனால் அதன்பின் சோர்ந்து போய் வீட்டிலேயே அமர்ந்து விடாமல், படப்பிடிப்பு, புனித தளங்களில் வழிபாடு என பிஸியாக சுற்றி வருகிறார் சமந்தா. இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார் சமந்தா..
அதில், “உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாக தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காக பணம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவளது கல்விக்கு செலவிடுங்கள். முக்கியமாக அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதிலாக அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்” என ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார் சமந்தா.