தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். அது பற்றியும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் ''அண்ணாத்த' படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த், சிவா இணைய் வேண்டும்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அண்ணாத்த'' படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை சிவா சார், ஆனா, நான் பார்த்துட்டேன். படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணியோட நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு என்ன சொல்லணும்னே தெரியலை. தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு 'அண்ணாத்த' படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளின் ஆசையை ரஜினிகாந்தும், இயக்குனர் சிவாவும் நிறைவேற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.