திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பம் என்றால் சூர்யா குடும்பம் தான். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என 4 நடிகர்கள் உள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படத்துக்காக சூர்யா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சூர்யாவிடம் இயக்குனராக வாய்ப்பு உள்ளதா? என்று கேட்தற்கு “இயக்குனர் ஆவது பற்றி எனக்கு தெரியாது .. கார்த்தி கூட எதிர்காலத்தில் இயக்குனர் ஆகலாம்.. எப்போது பார்த்தாலும் நான் ஒரு கதை எழுதுகிறேன் .. இதுபற்றி ஆய்வு பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.. கார்த்திக் இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஜோதிகா கூட நிறைய ஐடியா வைத்திருக்கிறார். அவர் இயக்குனர் ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சாத்தியம் இருக்கிறது. நான் நடிப்பதிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக இருக்கிறேன்!” என்று சூர்யா கூறி இருக்கிறார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா எப்போது நடிப்பார் என்கிற கேட்டபோது, ஒரு வார்த்தையில் பதில் சொன்ன சூர்யா, “ஸ்கிரிப்ட் .. ஸ்கிரிப்ட் வரவேண்டும் ஜோடியாக எல்லாவிதமான கதைகளும் பண்ணிவிட்டோம். அடுத்து வேறு ஒரு பரிமாணத்திலான கதை கிடைத்தால் பண்ணலாம் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக அப்படி ஒரு படம் பண்ணுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த தோற்றம் மற்றும் வயதில் இணைந்து என்ன படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று பார்த்து அதன்படி பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.