ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) மாரடைப்பு ஏற்பட்டு தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார். மோட்ச தீபம் ஏற்றிய பின்னர் அவர் புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும் என்று மூன்று முறை கூறினார். இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, ‛அன்பர் புனித் ராஜ்குமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான காலகட்டத்தில் அவரது குடும்பத்தாருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.