ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து அவரது புதிய படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகிறது. இந்தப்படத்தின் கதை குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வம்சி, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
“நான் விஜய்யின் எளிமையை ரசிப்பவன்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை விஜய்க்கு இருக்கும் மாஸ் பவரை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளேன்.. அதேசமயம் இது அரசியல் படமல்ல.. படம் முழுதும் உணர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த மாதம் இறுதியில் இருந்து படம் குறித்த அப்டேட் தகவல்கள் உங்களை தேடி வரும்.. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என கூறியுள்ளார் வம்சி பைடிப்பள்ளி.