ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு மன உளைச்சல் காரணமாக யோகா, தியானம், ஆன்மீகம் என்று ஈடுபட்டு வந்த சமந்தா தற்போது புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு மற்றும் ஹிந்தியில் டாப்சி தயாரிக்கும் படம் என தற்போது புதிதாக மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. மேலும், தற்போது சமந்தா தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதன்காரணமாக தமிழ், தெலுங்கில் அதிகப்படியாக சம்பளம் வாங்கும் ஒரு சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவராகியிருக்கிறார்.